பருத்தித்துறையில் கைதான 22 இந்திய மீனவர்களும் விடுதலை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் கைதான 22 இந்திய மீனவர்களும் விடுதலை!

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடமும், கடற்படையிடமும் எமது செய்திச் சேவை வினவியது.

இதற்கு பதிலளித்த அவற்றின் அதிகாரிகள், அவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிட்டனர். 

 இந்தநிலையில், படகுகளில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறு கடற்படையினரால் திருத்தியமைக்கப்பட்டு குறித்த 22 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் திருப்பி அனுப்பப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.