இணுவில் ரயில் கடவை அனர்த்தங்களை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வு!

இணுவில் ரயில் கடவை அனர்த்தங்களை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வு!

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நிரந்தர ரயில் கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை ரயில் கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ரயிலுடன் சிற்றூர்ந்து மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். 
 
நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் ரயில்வே துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான் நடவடிக்கையை மேற்கொண்டார்.

பணிகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்பாடாக உள்ளூர் இளைஞர்கள் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.