கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி.

கலவானை நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கார் பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு அருகில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் 54 yaeதாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

கலவானை கோனகலகந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 
அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய
சந்தேக நபர் ஒருவரை கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.