கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்  மீனவர்  உயிரிழப்பு! 

கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்  மீனவர்  உயிரிழப்பு! 

தலைமன்னாரில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

படகில் பயணித்துக்கொண்டிருந்த போதே, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார்.

ஏனைய மீனவர்களின் உதவியுடன் குறித்த மீனவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு, தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக  காவல்துறையினர்   தெரிவித்துள்ளனர்.

சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.

56 வயதான ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன், தலைமன்னார் காவல்துறையினர்  மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.