நீடித்து வரும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் போராட்டம்!

நீடித்து வரும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் போராட்டம்!

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பை குறித்த சங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை போனஸ் கொடுப்பனவு குறைப்பு கோரிக்கைகளை முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘2024ஆம் ஆண்டு வரலாற்றில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக இலங்கை வங்கி சாதனை படைத்ததோடு, 107 பில்லியனை இலாபமாக ஈட்டியிருந்தது.

இலங்கை வங்கி ஈட்டும் லாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறதுடன்இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்பட உள்ள அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பணம் தொடர்பாக இரண்டு பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்த நிதியமைச்சு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன எனவும், ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில் நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.