இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலிய பெண் கைது...

இலங்கையிலிருந்து வெளியேறிய இஸ்ரேலிய பெண் கைது...

இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு வெளியேறிய இஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 5.56 மில்லிமீற்றர் வெடிமருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதுடைய குறித்த பெண் இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தனது நண்பருடன் இலங்கைக்கு பயணித்துவிட்டு நாடு திரும்பவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிமருந்துகள் இருந்ததைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். 
இதனையடுத்து அவர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.