ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு - இருவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு - இருவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை

லெஜண்ட்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முகாமையாளர்கள் இருவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ண குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி பல்லேகல மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் தொடர்பாக குறித்த இருவரும் தங்களிடம் கலந்துரையாடியதாக ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதன்படி, குறித்த இரண்டு இந்திய பிரஜைகளும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.