மைத்திரிபாலவின் கருத்து பாரதூரமானது - மனோ கணேசன்

மைத்திரிபாலவின் கருத்து பாரதூரமானது - மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து பாரதூரமானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன்,காவிந்த ஜயவர்தன ஆகியோர் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் இல்லத்தில் நேற்று (23) காலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த போது இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தி உண்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நழுவ விடமாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.