நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, தென், மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 75  மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.