வடக்கின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் - அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத   போதைப்பொருள் கடத்தல், கால்நடைகள் வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

வடக்கின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் - அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத   போதைப்பொருள் கடத்தல், கால்நடைகள் வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி இன்றைய தினம் (14) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் இதனைக் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

எனவே, ராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத்தினர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது. 

குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும்  நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்காக 700ற்கும்  மேற்பட்ட வீடுகள் ராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, எதிர்வரும் காலத்திலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தான் கோரியதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.