லங்கா IOC   உண்மைக்கு  புறம்பான தகவலை வெளியிடவில்லை!      

லங்கா IOC   உண்மைக்கு  புறம்பான தகவலை வெளியிடவில்லை!      

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, அதிகபட்ச வரம்பிற்கு அதாவது முழுமையாக  எரிபொருள் தாங்கிகளை நிரப்ப வேண்டாம் என   IOC நிறுவனம் கோரவில்லை என்று அறிவித்துள்ளது, இத்தவலானது உண்மையை கண்டறியும் இணையதளத்தினுடாக ஆராயப்பட்டு  தற்பொழுது மக்களுக்கு  விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.    

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல வெப்பநிலை காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) தமது வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளதாக வேறு இணையதளங்களில் செய்திகள்  பரவி வந்த நிலையில் இது உண்மைக்கு புறம்பான தகவல் என்று அந்நிறுவனம் மக்களுக்கு அறிவித்துள்ளது  
 
எனவே  இக்கூற்றுக்கள் வைரலாகி, இலங்கை மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது. எவ்வாறாயினும், அவை உண்மையல்ல என்றும், ஐஓசி அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றும்  அறிவித்துள்ளது.