பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

யாழ் தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 49 வயதான பெண்ணே  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.