இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்களே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.