தங்கத்தை போல் உயர்ந்த தேசிக்காயின் விலை!

இலங்கையில் பொதுச் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், 

தங்கத்தை போல் உயர்ந்த தேசிக்காயின் விலை!

இன்றைய சந்தை நிலவரப்படி போஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாயாக இருந்தது.

இதுதவிர ஏனைய சில மரக்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளன.

கரட் ஒரு கிலோகிராமின் விலை 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், ஒரு கிலோகிராம் தேசிக்காய் கிலோ ஒன்று ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.