ஓடும் பேருந்து கஹவத்தையில் தீ பற்றியது! 

ஓடும் பேருந்து கஹவத்தையில் தீ பற்றியது! 

எம்பிலிப்பிட்டியவில் இருந்து 50 பயணிகளுடன் இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்து காவத்தை மாதம்பையில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.

சாரதி நடத்துனர்கள் மற்றும் பயணிகள் எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்டு தீயும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.