கொட்டும் மழையிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கொட்டும் மழையிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொட்டும் மழையிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கொட்டும் மழையிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 நல்லூர் பகுதியில். உள்ள திலீபனின் நினைவிடத்தில் காலை 10.48க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06இற்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.