துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூவர் கைது

துசித ஹல்லோலுவவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூவர் கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநரான துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களை கொழும்பு குற்றப்பிரிவினர் நேற்று (24) மஹரகமவில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.