ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறை!

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறை!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவரை, டிபெஃன்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28) வழங்கியுள்ளது.