இன்று உலக மது ஒழிப்பு தினம் ஆகையால் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் பூட்டு!

இன்று உலக மது ஒழிப்பு தினம் ஆகையால் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் பூட்டு!

உலகம் முழுவதும்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால்   இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது