இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.

இதனால், நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்கலாம்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-35) கி.மீ. வரை இருக்கும்.

கடல் நிலை:

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.