சினிமா படப்பிடிப்புக்காக நிறுத்தப்படும் ரயில் சேவைகள்!

சினிமா படப்பிடிப்புக்காக நிறுத்தப்படும் ரயில் சேவைகள்!

திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக இன்று முதல் (09ஆம் திகதி ) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த புகையிரத சேவை பதுளை வரை பயணிக்காது. 

அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் புகையிரதங்கள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும். இந்த அறிவித்தலின் படி திட்டமிடுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.