இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு!

இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிகளில் இன்று (20) காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இரண்டு நிலநடுக்கங்களும் 4.9 மற்றும் 4.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் எற்படாது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது