கொழும்பு  முகத்துவாரம் துப்பாக்கிச் சூடு - மேலும் இருவர் கைது!

கொழும்பு  முகத்துவாரம் துப்பாக்கிச் சூடு - மேலும் இருவர் கைது!

கொழும்பு – முகத்துவாரம் - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேதவத்தை – கலுபாலம பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த, சோதனை போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதானவர்கள், கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 21 வயதுடையவர்கள் தெரியவந்துள்ளது.

இதன்போது, ஒரு சந்தேகநபரிடம் இருந்து 4 கிராமுக்கும் அதிகளவில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெல்லே சாரங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த துப்பாகிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில், ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.