இரவு நேரப் பொருளாதாரத்தால் 70 சதவீதம் அந்நிய செலாவணி ஈட்டலாம்!

இரவு நேரப் பொருளாதாரத்தால் 70 சதவீதம் அந்நிய செலாவணி ஈட்டலாம்!

இலங்கையில் இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியை 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இரவு நேர பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.