பொலிஸ் அதிகாரி குடும்பத்திற்கு ஜனாதிபதி நட்டயீடு!

2023ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி உபுல் சமிந்தவின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக 4.2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி குடும்பத்திற்கு ஜனாதிபதி நட்டயீடு!

இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் 1.7 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, உபுல் சமிந்த உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.