சிறுத்தையின் நடமாட்டம் அச்சத்தில் பிரதேச மக்கள்!

சிறுத்தையின் நடமாட்டம் அச்சத்தில் பிரதேச மக்கள்!

பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தில் தொடர்ந்து சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாரத்துக்குள் 25 கற்கும் அதிகமான நாய்களை பிடித்துள்ளது.

மெந்தகந்த,பில்லகுபுர,பனாகந்த ,கெஸல்வத், பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களே இவ்வாறு சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. காணாமல் போன நாய்களின் உடற் பாகங்கள் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இப்பிரதேச மக்கள் தேயிலை தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு அச்சம் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.