வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை தொடரும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழை தொடரும்!

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதேநேரம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.