இலங்கையில் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தாக்கம் அதிகரிப்பு!

இலங்கையில் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தாக்கம் அதிகரிப்பு!

இலங்கை மக்கள் மத்தியில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அத்துடன், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி, உடல்வலி, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் அவதானமாக செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்புளுவென்சா வைரஸ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதமும் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் 25 சதவீதமானவை இன்புளுவென்சா வைரஸ் தொற்றாளர்களுடையது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப்பெண்கள், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நோய்த்தொற்றுக்கு உட்பட்டவர்கள் இன்புளுவென்சா வைரஸ் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருமல் உள்ளவர்கள் மற்றையவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முகக்கவசங்களை அணியுமாறும் சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது