குஜராத் படகு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்

குஜராத் படகு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹர்னி ஏரியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலை சுற்றுலாச் சென்ற மாணவர்களின் குழுவே விபத்துக்குள்ளானதாக குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது படகில் 27 மாணவர்கள் இருந்ததுடன், ஏனைய 13 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.