முகேஷ் அம்பானியை பின்தள்ளிய கௌதம் அதானி - 45 நாட்களில் நடந்த சம்பவம்!

தொழில் அதிபர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கூடியதை அடுத்து ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முகேஷ் அம்பானியை பின்தள்ளிய கௌதம் அதானி - 45 நாட்களில் நடந்த சம்பவம்!

இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி கௌதம் அதானி முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

இருவருக்கும் மத்தியிலான சொத்து மதிப்பு வித்தியாசம் மிகவும் குறைவு என்றபோதும், முதல் இடத்தைக் கௌதம் அதானி சுவீகரித்துள்ளார்.

குறித்த பாரியமாற்றம் கடந்த 30 தொடக்கம் 45 நாட்களுக்குள் நடந்துள்ளது.

இந்தநிலையில் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் இன்று காலை நிலவரத்தின் படி இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பெரும் பணக்காரர் என்ற முக்கிய இடத்தை மீண்டும் கௌதம் அதானி கைப்பற்றியுள்ளார்.