சூரியனை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது ஆதித்யா எல்-1.

சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ரொக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

சூரியனை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது ஆதித்யா எல்-1.

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகின்றது.

குறித்த விண்கலத்தில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

பூமியில் சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் வன்' என்னும் தளத்தில் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. 

இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்யவுள்ளன. 

ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. 

இதையடுத்து, ரொக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 24 மணி நேரக் கணிப்பு நேற்று முற்பகல் 11.50 க்கு தொடங்கியது. 

தொடர்ந்து ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்தநிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட் திட்டமிட்டப்படி இன்று விண்ணில் பாய்ந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.