சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் தெரிவு! 

சிங்கப்பூரின் 9 வது ஜனாதிபதியாக இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் அமோக வாக்குகளுடன் தெரிவாகியுள்ளதாக சிங்கப்பூர் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் தெரிவு! 

70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 9வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். 

2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் பிரதி பிரதமராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதுதவிர, அவர் கடந்த காலங்களில் சிங்கப்பூரின் நிதி, கல்வி மற்றும் மனிதவள அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

தர்மன் சண்முகரட்ணம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளமை சிறப்பம்சமாகும்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எங் கொக் சாங் 15.72 சதவீத வாக்குகளையும், டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.