விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு பெண் தெய்வத்தின் பெயர் சூட்டப்பட்டது! (காணொளி)

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவினால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு பெண் தெய்வத்தின் பெயர் சூட்டப்பட்டது! (காணொளி)

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவினால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இடத்தில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய காணொளியை இஸ்ரோ தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்காக இன்று காலை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது, சந்திரயான் - 3 திட்ட பணிப்பாளரான தமிழகத்தின் விஞ்ஞானி வீரமுத்துவேலை சந்தித்து கலந்துரையாடியதுடன் சந்திரயான் 3 மாதிரியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைவுப் பரிசாக பெற்றுக்கொண்டார்.