கனிஷ்ட ஊழியர்களை தாக்கிய வைத்தியருக்கு ஆதரவாக அமைதி போராட்டம்!

கனிஷ்ட ஊழியர்களை தாக்கிய வைத்தியருக்கு ஆதரவாக அமைதி போராட்டம்!

இலங்கை : காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் இரண்டு கனிஷ்ட ஊழியர்களை தாக்கிய விசேட வைத்திய நிபுணருக்கு ஆதரவான தரப்பினரால் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் உறவினர்களினால் கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வைத்திய நிபுணர் நேற்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

கனிஷ்ட ஊழியர் ஒருவரையும், பெண் ஊழியர் ஒருவரையும் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.