களனி ஆற்றில் சிறுவனைக் கவ்விச் சென்ற முதலை?

கடுவெல பிரதேசத்தில் நேற்று (ஜனவரி 16) முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்தார்.

களனி ஆற்றில் சிறுவனைக் கவ்விச் சென்ற முதலை?

சம்பவத்தின் போது சிறுவன் தனது சகோதரன் மற்றும் பாட்டியுடன் களனி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

update 

கடுவலை பகுதியில் களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் முதலையால் கவ்விச்செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.