இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம், நாடு முழுவதும் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று:

காற்று வடகிழக்கு அல்லது மாறுபடும் திசையில் வீசும் மற்றும் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.

கடல் நிலை:

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும்.