ஈழத்தமிழர்களின் தரப்பு நியாயப்பாடு சிறிலங்காவாலும் மேற்குலகாலும் ஏன் மறுக்கப்படுறது - சட்டவாளர் நடராஜா காண்டீபன் கேள்வி!

"ஈழத்தமிழர்களது தரப்பில் இருக்கும் நியாயப்பாடு சிறிலங்காவாலும் மேற்குலகாலும் ஏன் மறுக்கப்படுறது" என சட்டவாளர் நடராஜா காண்டீபன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் அடிப்படையில் கருத்துரைத்த அவர் தமிழினப்படுகொலைக்கு  முழுமையான ஆவணமாக  உலகத்தமிழர் உரிமைக்குரலால் வெளியிடப்பட்ட Genocide Chronicle (தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு) ஆவணத்தை அடையாளம்காட்டி கருத்துரைத்தார்..

கடந்த 14.06.2024 அன்று சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்கால அரசியல் விவாத நிகழ்ச்சியிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.