வீட்டு மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி

வீட்டு மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி

மாத்தறை திக்வெல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

7 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை திக்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.