மட்டக்களப்பில் சிறுமியொருவர் மீது வன்முறை - உரியவர்கள் கவனத்திற்கு!

மட்டக்களப்பு மஜிமா நகர் பகுதியில் சிறுமி​யொருவர் மீது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உறவுக்கார பெணணொருவரால் வன்முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கா​ணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் ​வைரலாகி வருகின்றது.

சம்பவம் ​தொடர்பான விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுகுறித்து எமது பிராந்திய செய்தியாளர் விபரங்ளை ​சேகரித்து வருகிறார்.

ஏற்​கனவே, சிறார்கள் மீதான இவ்வாறான வன்முறை சம்பவங்கள் நாட்டில் மலிந்துவிட்டன.

ஒரு சில சம்பவங்கள் பாதுகாப்புத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலும் பல பிரச்சி னைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

இவ்வாறான நிலைமைகள் குறித்து அயலவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோருகின்றோம்.

பிந்திக்கிடைத்த செய்தி- 

சம்பவம் தொடர்பில் குறித்த உறவினர் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.