மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

மனைவி மீது கணவன் அதாவது மருமகன் தாக்குதல் நடாத்தியதை தட்டிக் கேட்ட மாமனர் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுடன் மருமகனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே சம்பவதினமான நேற்று பகல் வாக்குவாதத்தையடுத்து மருமகள் மருமகன் தாக்கியதையடுத்து அதனை கண்ட அவர் ஏன் தாக்குவதாக கேட்ட நிலையில் அவர் தலை மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.