மட்டக்களப்பு - கல்லடி - உப்போடை பேச்சியம்மன் ஆலயம் தீக்கிரை (காணொளி)!

மட்டக்களப்பு - கல்லடி உப்போடை அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம் தீக்கிரையாகியுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வௌியாகாத நிலையில்​ காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முனனெடுத்து வருகின்றனர்.

தீக்கிரையான சம்பவம் குறித்த காணொளிகளை பிரதேசவாசிகள் எமக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிந்திக்கி​டைத்த தகவல் :

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.

மேலும் பேச்சி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக குறித்த பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் அம்மாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டுள்ளமையே சிறப்பம்சமாகும்.