காவல்துறை அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாட வேண்டும் - கஜேந்திரகுமார் 

காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

காவல்துறை அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாட வேண்டும் - கஜேந்திரகுமார் 

காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடந்த மூன்றாம் திகதி காவல் துறை அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் மருதங்கேணி காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுன்ற கூட்டத்தொடரில பங்கேற்பதற்காக தாம் கொழும்பிற்கு வருகை தந்துள்ளதோடு, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள முடியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.