சாந்தனின் உடற்கூராய்வு பரிசோதனை நிறைவு - உடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

சாந்தனின் உடற்கூராய்வு பரிசோதனை நிறைவு - உடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

காலஞ்சென்ற சாந்தனின் மரணவிசாரணை மற்றும் உடற்கூராய்வுப் பரிசோதனை என்பன நிறைவடைந்துள்ள நிலையில் உடலம் சற்று முன்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது சகோதரன் இட்டுள்ள சமூகவலைத்தள பதிவு  :

'சாந்தன் அண்ணாவின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனை முடிக்கப்பட்டு சற்று முன்னர் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் வீட்டு இறுதிக் கிரியைகள் பற்றிய தகவலை இரவு 8 மணிக்கு முன்னர் அறியத்தருகின்றேன்.'

சகோதரன்
மதிசுதா