ஈஸ்ரர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நம்பிக்கை நாயகர்கள் – பட்டியலிட்டது வத்திக்கான்

ஈஸ்ரர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நம்பிக்கை நாயகர்கள் – பட்டியலிட்டது வத்திக்கான்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கட்டுவாப்பிட்டி புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் ஈஸ்ரர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 167 நபர்களை நம்பிக்கைக்குரிய நாயகர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த இந்த 167 பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம், நம்பிக்கைக்குரிய சாட்சிகளின் பட்டியலில் உத்தியோகபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.