எதிர்க்கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராகும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.

 எதிர்க்கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராகும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், உரியமுறையில் செயற்படத் தவறிய, சில முக்கிய அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாற்றியமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என்பன இதில் அடங்குவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையிலான அண்மைய சந்திப்புகளில்,  புதிய பதவிகளை பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சுக்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.