35 பயணிகளுடன் தீப்பற்றிய சொகுசு பேருந்து - நீர்கொழும்பில் சம்பவம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து ஒன்று நீர்கொழும்பில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.

35 பயணிகளுடன் தீப்பற்றிய சொகுசு பேருந்து - நீர்கொழும்பில் சம்பவம்!

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

நேற்று புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாக பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் பாதிப்புகள் இன்றி காப்பாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் வேறு வாகனங்களில் விமான நிலையம் நோக்கி சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்து காரணமாக பேருந்தின் பின்பகுதி முற்றாக எரிந்துள்ளது. 

கொச்சிக்கடை பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.