மண்வெட்டி - பொல்லால் தாக்கி கொலை இரட்டைக் கொலை - ஒருவர் கைது மற்றவர் தலைமறைவு! (Photos)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்வெட்டி - பொல்லால் தாக்கி கொலை இரட்டைக் கொலை - ஒருவர் கைது மற்றவர் தலைமறைவு! (Photos)

இவ்வாறு இறந்தவர் 40 வயதான 03 பிள்ளைகளின் தந்தையான வீரபாண்டி பெஜ்சமீன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நேற்றிரவு தனது தாயுடன் முரண்பட்டு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த 28 வயதான பெரியசாமி விஜயகுமார் என்பவர் முறுகல் நிலையை சமரசரம் செய்ய சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, குறித்த குடும்ப உறுப்பினர்களுக்கும் அயலவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது .

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், மோதலை விலக்கச் சென்ற பெரியசாமி விஜயகுமார் என்பவர் வீரபாண்டி பெஜ்சமீனை தடியால்  தாக்கியுள்ளார் .

அதனை அடுத்து அவர் பலத்த காயத்துக்கு உள்ளான நிலையில், தோட்ட மக்களின் உதவியோடு லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வந்த போது  தலைமறவாகி இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, அக்குரெஸ்ஸ இஹல மலிதுவ பிரதேசத்தில் மகனால் பொல்லால் தாக்கப்பட்டு தாயொருவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இஹல மலிதுவ பிரதேசத்தில் வசித்து வந்த 65 வயதான பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட 28 வயதான மகன் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பன்கம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.