நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை!

நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.