மின்சாரம் தாக்கி இளம் விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில், இளம் விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இளம் விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில், இளம் விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

குறித்த பகுதியில், தாம் மேற்கொண்டுள்ள பயிர்ச்செய்கையை பார்வையிட சென்றபோது, வயல் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய இளம் விவசாயி ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.