இலங்கையில் பல்வேறு விபத்துக்களால் 12,000 பேர் உயிரிழப்பு!

பல்வேறு விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், 12,000 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்வேறு விபத்துக்களால் 12,000 பேர் உயிரிழப்பு!

ஊனமுற்றலை தடுப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டில் நேற்று (20) கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஏறத்தாழ 3000 விபத்துக்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விபத்துக்களில் 50% வீடுகளில் நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான போக்கை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.